
நாட்டில் அவசர காலச் சட்டத்தை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அமுலில் இருக்கும் காலத்தின் பின்னர் குறித்த சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு ஒரு மாதத்துக்குள் பாராளுமன்றில் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து அதை நிறைவேற்றவேண்டும்.
இந் நிலையில் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும்போது குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இதேவேளை நீடிப்பு பிரேரணையை தோற்கடிக்க ஆளுங்கட்சியில் இருந்துகொண்டு புரட்சி செய்யும் 11 கட்சிகளும் முன்வர அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.