புதிய பிரதமராக தினேஷ்? நிதியமைச்சராக ஹர்ஷ டி சில்வா!

புதிதாக அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்க அமைச்சரவையில் தற்போது நிதியமைச்சராக உள்ள பஷில் ராஜபக்ஷ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகவுள்ளார்.

இன்னும் சில மணி நேரங்களில் அவர் பதவி விலகுவார் என்று டெய்லிமிரர் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே அவர் பதவி விலக முடிவு செய்துள்ளார். 11 கட்சிகளின் உறுப்பினர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

உடனடியாக இடைக்கால அரசாங்கத்தை நிறுவவேண்டும் என்ற கோரிக்கையின் பிரகாரமே பிரதமர் மஹிந்த பதவி விலகுகிறார்.

இதேவேளை, புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. எனினும் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை நிதியமைச்சராக பஸில் ராஜபக்ஷவுக்கு பதிலாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்ஷ டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *