இலங்கையில் கடும் வெப்பம் – மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் அதீத வெயில் காரணமாக ஒருவர் நாளொன்றுக்கு குறைந்தது 2 அல்லது 3 லீற்றர் நீரைப் பருக வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுவது நல்லது என்றும் கூறியுள்ளார்.

இந்த நாட்களில் கடுமையான வெயில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் பயணம் செய்யும் போது தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடி அணிவது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *