காபந்து அரசு அமைக்கவிட்டால் அரசில் இருந்து விலகல்: ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

கொழும்பு, ஏப்ரல் 3: அமைச்சரவையை கலைத்து இன்னும் ஒரு வாரத்தில் காபந்து அரசாங்கத்தை அமைக்காவிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகுவார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக காபந்து அரசாங்கத்தை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்வார்கள் என அந்தக் கட்சி கூறியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *