அமைச்சரவை இராஜினாமாக்களை ஜனாதிபதி இன்று ஏற்றுக்கொள்வாரா?

அமைச்சரவையின் இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டவுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதனை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றிரவு அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, அலரிமாளிகையில் உள்ள பிரதமரிடம் கையளித்துள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சரவை இராஜினாமாக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்க பிரதமர் இன்று ஜனாதிபதியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *