இலங்கை – இந்தியா விமான சேவையை குறைக்க ஏயார் இந்தியா நடவடிக்கை!

இலங்கை – இந்தியா விமான சேவையை குறைப்பதாக ஏயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருப்பதன் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தற்போது வாரத்திற்கு 16 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், அந்த எண்ணிக்கையை 13 ஆவதாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவின் கடன் வசதி, எரிபொருள் உணவுகள் ஆகியவை இலங்கை மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *