இலங்கை போன்ற நிலை இந்தியாவுக்கும் ஏற்படும் என மோடியிடம் எடுத்துரைப்பு!

மாநிலங்கள் பொருளாதாரத்தை சீரமைக்காமல் இலவச திட்டங்களை அறிவிப்பதால் எதிர்காலத்தில் இந்தியாவும், இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என  பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு துறைகளிலுள்ள செயலாளர்கள் உட்பட பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

இதன்போது  தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் கவர்ச்சிக்கர திட்டங்கள் குறித்து அதிகாரிகள் பேசியுள்ளனர்.

மாநிலங்களின் பொருளாதார நிலை அதலபாதாளத்தை நோக்கி செல்வதாகவும், மத்திய அரசு உதவாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

மாநில நிதிநிலைமையை சீரமைக்காமல் இலவச திட்டங்களை தொடர்ந்தால் இலங்கை, கிரீஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்டதுபோன்ற பொருளாதார நெருக்கடியை அத்தகைய மாநில அரசுகள் சந்திக்க நேரிடும் எனவும் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *