அமைச்சர்களின் இராஜினாமா சட்ட ரீதியானது அல்ல என்கிறது சட்டத்தரணிகள் சங்கம் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (04) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எதிர்காலத்தில் திட்டமிடப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்திருந்த போதிலும், உண்மையில் அவ்வாறான இராஜினாமா இடம்பெறவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சர் ஒருவர் தனது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டுமேயன்றி ஜனாதிபதியிடமே சமர்ப்பிக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, ஜனாதிபதியிடம் கடிதம் கையளித்த நாமல் ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர மற்றும் அலி சப்ரி ஆகியோரைத் தவிர வேறு எவரும் சட்டரீதியாக பதவி விலகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
