அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்கள்!

நாடளாவிய ரீதியில் மக்களால் நடத்தப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான போராட்டங்கள் பதிவாகி வருகின்றன.

அரசுக்கு எதிராகவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு எதிராகவும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய போராட்டங்களில் பல்வேறு தொழில்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு 07 பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவொன்று இன்று காலை கொழும்பு நெலும் பொகுண திரையரங்கிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல ஹோமாகம நகரிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் சுதந்திரக் கலைஞர்களின் குரல் அமைப்பு இன்று காலை பத்தரமுல்லை தியத உயனவுக்கு எதிரே போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

அத்தோடு, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு எதிரே சினிமா துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு கலைஞர்கள் குழுவும் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *