
அமைச்சரவை அமைச்சர்கள் இராஜினாமா செய்ததன் பின்னர், நான்கு புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிய அமைச்சரவையில் பசில் ராஜபக்சவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அதேவேளை கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.