
மிரிஹானயில் அண்மையில் இடம் பெற்ற சம்பவத்தில் போது பொலிஸாருக்கு எதிராக நின்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாயிருந்து .
இதற்கு பொறுப்பு கூறும் முகமாக இலங்கை காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் போராட்டத்தின் போது பொலிஸாரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், பொலிஸாரின் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன .
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டு களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதாகவும், ஆர்ப்பாட்டக்காரர் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற போலிகளுக்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் எனவும் இலங்கை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது .