நாடெங்கிலும் போராட்டம்: வடக்கில் இலங்கை வங்கி ஊழியர்கள் கொண்டாட்டத்திற்கு தயார்

யாழ்ப்பாணம், ஏப் 04

நாடளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ள முடியாது மக்கள் திணறி, வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்த்து வரும் நிலையில், இலங்கை வங்கி தமது ஊழியர்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு போட்டியினையும், மாபெரும் விருந்துபசார நிகழ்வினையும் நடாத்த உள்ளனர்.

வடமாகாணத்தில் உள்ள தமது ஊழியர்களுக்கு இடையில் குறித்த போட்டியினை கடந்த 3ஆம் திகதி நடாத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் , நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமையால், அது நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடாத்தவுள்ளனர்.

துரையப்பா விளையாட்டு அரங்கில் மாலை ஆரம்பமாகும் ஊழியர்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியானது ,மாலை 5 மணியளவில் முடிவடைந்ததும் , தொடர்ந்து ஊழியர்களுக்கு இடையிலான விருந்துபசார நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, போராடங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தாமும் எரிபொருள் , எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளமையால் தற்போது இந்த நிகழ்வினை நடத்தாது, பிரிதொரு தினத்தில் நடாத்துமாறு பெரும்பாலான ஊழியர்கள் கோரிய போதும், அவர்களின் கோரிக்கையை மீறி நாளை மிகப்பெரியளவில் நிகழ்வினை நடாத்த வங்கி உயர் அதிகாரிகள் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *