ஜனாதிபதியை வீட்டுக்கு அல்ல சிறைக்கு அனுப்புவதே தீர்வாக இருக்கும் ! – இலங்கை பாடகர் ஷிஹான்

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அல்ல சிறைக்கு அனுப்புவதே தீர்வு என இலங்கை பாடகர் ஷிஹான் மிஹிரங்கா தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குலத்தின் குடும்ப உறுப்பினர்களையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று மிஹிரங்க கூறினார்.

ராஜபக்சக்களும், அவர்களது நெருங்கிய குடும்பத்தினரும் எடுத்த ஒவ்வொரு சதமும் திருப்பிக் கொடுக்கப்படும் வரை நாட்டில் இருக்க வேண்டும்.

ராஜபக்ஷக்கள் எப்பொழுதும் நாட்டை விட்டு ஓடியவர்கள், இதற்கு முன்னரும் இவ்வாறான நெருக்கடிகளில் இருந்து தப்பியவர்கள், தற்போதைய நெருக்கடியிலிருந்து தப்பிக்க அவர்களை அனுமதிக்கக் கூடாது.

இந்த அமைதியான போராட்டங்களை ராஜபக்சக்கள் நிலைமையில் இருந்து தப்பிக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் உழைக்க வேண்டும்.

அவர்களை இந்த நாட்டில் வைத்திருப்பது எங்களின் வெற்றி, இல்லாவிடில் இந்த போராட்டத்தில் நாம் தோல்வியடைந்துள்ளோம் என ஷிஹான் மிஹிரங்க சுட்டிக்காட்டினார்.

இலங்கைப் பாடகர் பொதுமக்களிடம் போராட்டங்களைத் தொடருமாறும், முடிந்தால், தீர்வு எட்டப்படும் வரை குறைந்தது ஐந்து ராஜபக்சக்களையாவது நாட்டில் வைத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி மற்றும் அவரது ஆட்சிக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்றுவரும் பொது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *