தமிழ்நாட்டில் கொரோனா பரவல் முற்றாக நீக்கம்: சுகாதாரத்துறை

கொழும்பு, ஏப் 4

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டொக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில்,

முகக் கவசங்களை அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்டவை தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *