ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான சிலர் நாட்டினை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மிகவும் நெருக்கமான சிலர் நாட்டினை விட்டு வெளியேறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானர் என கூறப்படும் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் நாட்டினை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

விமானத்தில் பயணிப்பதற்காக அவர்கள் செல்லும் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகின்றது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வலுவடைந்து வரும் நிலையிலேயே இந்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் மனைவி உள்ளிட்ட சிலர் நேற்று காலை நாட்டினை விட்டு வெளியேறியுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *