பிறந்து ஆறு நாட்களேயான குழந்தை கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!

பிறந்து ஆறு நாட்களேயான குழந்தை கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!

மூச்சுத் திணறல் காரணமாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்த 6 நாட்களேயான சிசுவின் இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் (12) நடைபெற்றுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி பிறந்த குழந்தை, சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சிசுக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது.சிசு உயிரிழந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிசுவின் இறுதிக்கிரியைகள் பலாங்கொடை தஹமான தகனசாலையில் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *