சு.கவில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைக்க முயற்சி

கொழும்பு, ஏப் 05

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி சென்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நாடாளுன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த சிலர் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது தொடர்பில் கலந்துரையாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *