கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை உடனடியாக கூட்டுங்கள்: ரெலோ சம்பந்தனிடம் வலியுறுத்தல்

கொழும்பு, ஏப் 04

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நீண்டகாலமாக இடம் பெறாமையால் உடனடியாக இன்று செவ்வாய்க்கிழமை கூட்டுமாறு ரெலோ வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதைய நாட்டு சூழலைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *