
கொழும்பு, ஏப் 05
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தீ வைப்பு சம்பவங்கள், அத்துமீறி நுழைதல் போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையோர் வீடியோ ஊடாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு எந்தவொரு நபருக்கும் உரிமை உள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
எனினும், அமைதியின்மையை தோற்றுவித்து, வன்முறைகளை ஏற்படுத்த முயற்சிப்போர் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.