போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்த பொலிஸ் சீருடை அணிந்தவர் பொலிஸ் உத்தியோகத்தரா என்பது குறித்து விசாரணை!

கொட்டாவாயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு ஆதரவளித்த பொலிஸ் சீருடைக்கு நிகரான காக்கி உடையை அணிந்தவர் பொலிஸ் உத்தியோத்தரா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தமைக்கு சாட்சியமளிக்கும் பரவலான காணொளிக்கு பதிலளிக்கும்போதே பொலிஸார் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின்போது, காக்கி உடையில், கருப்பு ஜாக்கெட் மற்றும் வெள்ளை ஹெல்மெட் அணிந்திருந்த ஒருவர், “நாங்கள் சீருடையில் இருந்தாலும் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூட்டத்தில் உரையாற்றினார்.

இந்நிலையில், அவர் உண்மையான பொலிஸாரா அல்லது வேறு சேவையை சேர்ந்தவரா அல்லது சாதாரண மனிதரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *