அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவிப்பு!

அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தனியான குழுவாக அமரவுள்ளதாக அநுர பிரியதர்ஷன யாப்பா நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனவிரத்ன, நிமல் லான்சா, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் பலர் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்தோடு அமைச்சரவை அமைச்சர்கள் எவரும் சட்டரீதியாக தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யவில்லை என்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, உதய கம்மன்பில, திரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க உள்ளிட்டோர் சுயாதீனமாக செயற்படுவார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *