மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி!

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக  பல்கலைக்கழகத்தில் இருந்து செங்கலடி சந்திவரையில் ஆர்ப்பாட ஊர்வலத்தில்   நேற்று (திங்கட்கிழமை) திகதி ஈடுபட்டனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் இந்த அரசுக்கு எதிராகன பேராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள்   பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஓன்றினைந்தனர்.

இதனையடுத்து ஒன்றினைந்த மாணவர்கள் கோட்டா வீட்டுக்கு போ, மின்சாத் தடை எரிபொருள், காஸ், பால்மா தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தி ஜனாதிபதி உள்ளிட்ட ஆட் சியாளர்களை வெளியேறுமாறு பல்வேறு வாகனங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு  பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக செங்கலடி சந்திவரை சென்று அங்கிருந்து மீண்டும் பல்கலைக்கழகத்தை சென்றடைந்தது

இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து அந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை பல்கலைகழகத்துக்கு முன்னால்  ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவர்கள்  தீப்பந்தம் ஏற்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *