
கொழும்பு, ஏப் 05
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் தமது தரப்பினர் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
மேலும், எந்தவொரு அமைச்சரும் சட்டரீதியாக இதுவரையில் பதவி விலகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று நாடாளமன்றில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.