நாடாளுமன்றில் முஷாரப்பிடம் ரூ.5000 தாளை நீட்டிய சாணக்கியன்

கொழும்பு, ஏப் 05

முஷாரப் எம்.பி பாராளுமன்றில் உரையாற்றும்போது அவர் முன் சென்ற சாணக்கியன் எம்.பி . ஐயாயிரம் ரூபா நாணயத் தாளை நீட்டியபடி எதிர்ப்பை தெரிவித்தார்.

ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பின்னர், நாட்டின் நிலைமை குறித்தும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும் முஷாரப் எம்.பி பேசினார்.

அதன்போது அவர் முன் சென்ற சாணக்கியன் எம்.பி ,ஐயாயிரம் ரூபா தாளை நீட்டியபடி அதனை பெற்றுக்கொண்டு பேசுமாறு சைகை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *