4 அமைச்சர்கள் நியமனம்!

நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளைச் சட்ட ரீதியாகவும் நிலையாகவும் பேணுவதற்காக நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* கல்வி – தினேஷ் 
* வெளிநாட்டலுவல்கள் – பீரிஸ்
* நெடுஞ்சாலைகள் – ஜோன்ஸ்டன்
* நிதி- அலி சப்ரி

முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளைச் சட்ட ரீதியாகவும் நிலையாகவும் பேணுவதற்காக நான்கு அமைச்சர்களை கோட்டாபய ராஜபக்ச  நியமித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

வெளிநாட்டலுவல்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் அமைச்சுப் பதவி மற்றும் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சபைத் தலைவர் மற்றும் பிரதம கொறடா ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளதால் இந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவுகின்ற தேசிய சவால்களை தீர்ப்பதற்குப் பங்களிக்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஜனாதிபதி ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் அவர்களுடன் கலந்துரையாடி நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நான்கு அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

    வெளிநாட்டலுவல்கள் – பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்
    நெடுஞ்சாலைகள் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (ஆளுங் கட்சியின் பிரதம கொறடா)
கல்வி – தினேஷ் குணவர்தன (சபைத் தலைவர்)
    நிதி – அலி சப்ரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *