
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியையும் சாராமல், ஆளும் கட்சியையும் சாராமல் சுயாதீனமாக செயற்பட போவதாக நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் சபையில் இன்று தெரிவித்தார்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,நல்ல காரியம் என்று சொல்வதைப் போன்று 5000 ரூபாய் தாளை அவர்முன் காண்பித்தார்.
இதனால் சபையில் பெரும் கூச்சல் ஏற்பட்டது.