ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவோம்: சஜித்

கொழும்பு ஏப் 05

நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்ததற்காக பிரதமருக்கு அந்த அதிகாரத்தை வழங்கவும் முடியாது. ஒரு சமநிலையிலான அதிகார பகிர்வை இருவரும் கொண்டிருந்த வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த அரசாங்கத்தை தற்போது வீட்டுக்கு அனுப்புவதற்காகவே மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், மக்களின் ஆசிர்வாதத்துடனேயே ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *