69 லட்சம் பேரின் ஆணை கோத்தாவுக்கு இருக்கிறதாம்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு 69 லட்சம் பேர் ஆணை வழங்கியுள்ளனர். எனவே, அவருக்கு பதவி விலக வேண்டிய தேவை இல்லை என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
நிதி அமைச்சு பதவி, வெளிவிவகார அமைச்சு பதவி என்பன முக்கியமானவை. அதேபோல நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சபை முதல்வர் மற்றும் பிரதம கொறடா பதவிகளும் அவசியம்.

அதனால்தான் ஜனாதிபதி நால்வருக்கு அமைச்சு பதவியை வழங்கியுள்ளார். விரைவில் புதிய முகங்களுடன் புதிய அமைச்சரவை மலரும் என நம்புகின்றேன். ஜனாதிபதிக்கு ஐந்தாண்டுகளுக்கு 69 லட்சம் பேர் ஆணை வழங்கியுள்ளனர்.

எனவே, அவர் பதவி விலக வேண்டியதில்லை. எனக்கும் மக்கள் பலம் இருக்கின்றது. தேர்தலொன்று வந்தால் தெரியவரும். மக்கள் போராட்டங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளும், அடிப்படைவாதிகளும் உள்ளனர், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *