
பிரதி சபாநாயகர் பதவியை ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதன் காரணமாக தமது பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.