
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நாடாமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
மேலும், 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை திருத்தங்களுடன் அமுல்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.