
அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் சட்டரீதியாக பதவி விலகவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே தாம் பதவி விலகி விட்டதாக கூறுவதன் மூலம் அது சட்டபூர்வமாகாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அனுர பிரியதர்சன யாப்பாவின் கருத்துப்படி, சபாநாயகர் பொய்காரராக செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த வி்ஜயசிறி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் பதவி விலகிவிட்டதாக ஜனாதிபதி இன்னும் சபாநாயகருக்கு அறிவிக்கவில்லை.
எனவே பிரதமர் உட்பட்டவர்கள் பதவி விலகவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி விஜயசிறி குறிப்பிட்டுள்ளார்.