
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்படுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கான பொறுப்பை சபாநாயகர் ஏற்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால் முழு நாடும் எங்களை சபிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை கைவிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.