நிசங்க குடும்பத்துடன் மாலைதீவுக்கு பறந்தார்!

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி தனது, குடும்பத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்குச் சென்றுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் நேற்று மாலைதீவு நோக்கிச் சென்றுள்ளனர். அவர்கள் சென்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தின் கணனி மற்றும் பாதுகாப்பு கமரா அமைப்பு சீர்குலைந்திருந்தது.

அதனால் கட்டுநாயக்க விமான நிலையம் புறப்படும் முனையத்தின் ஊடாக அவர்கள் விமானத்துக்குள் நுழைந்துள்ளனர்.

நிசங்க சேனாதிபதி இன்று அதிகாலை நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் இன்று நாடாளுமன்றத்தில் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நிசங்க சேனாதிபதியை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்றத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *