அரசதரப்பு உறுப்பினர்கள் கோட்டாவை பலிகடா ஆக்க முயற்சிக்கின்றனர் – பொன்சேகா

அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலிகடா ஆக்க முயற்சிக்கின்றனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி மீது பழியை சுமத்திவிட்டு நாடாளுமன்றில் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்த அவர்களுக்கும் சமமான பொறுப்பு உள்ளது என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *