வடமராட்சி எரிபொருள் நிலையத்தில் பதற்ற நிலை! பொலிஸார் தலையீடு

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சற்றுமுன்னர் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிலையத்தில், எரிபொருள் நிரப்புவதற்காக நீண்ட நேரமாக காத்திருந்த வாகனங்களின் சாதிகளுக்கும், எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பருத்தித்துறை பொலிஸார் எரிபொருள் நிரப்புவதற்கு வந்தவர்களுடனும், எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகிகளுடன் உரையாடி, உடனடியாக பிரச்சனையை தீர்த்துள்ளனர்.

கொள்கலன்களில் டீசல் நிரப்புவதில்லை என்ற உத்தரவாதத்தை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகிகள் வழங்கியதை அடுத்து எரிபொருள் கொள்கலன்களில் நிரப்புவது நிறுத்தப்பட்டு, நிலைமை சமாதானம் அடைந்ததுள்ளது.

நேற்று பிற்பகலில் இருந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காத்திருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *