கொழும்பு, ஏப் 05
இலங்கை தனது வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கும் இந்தத் தருணத்தில், ஒவ்வொருவரின் குரலும் முக்கியமானகும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
எதிர்ப்பாளர்களை அமைதியுடன் இருக்குமாறும், அவர்களின் குரல்கள் மற்றும் ஒற்றுமையைப் பயன்படுத்தி மாற்றத்துக்காக எடுக்கப்படும் முயற்சிகளையும் நான் வரவேற்கிறேன்.
இதற்கான தீர்வை விரைவாகக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தி, இலங்கை மக்களின் மனதை வெல்லுமாறு அரசாங்கத்தைக் கோருகிறேன் என்றார்.
