மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் கப்ரால்

மத்திய வங்கியின் ஆளுநராக அஜிட் நிவாட் கப்ரால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (14) வழங்கிவைக்கப்பட்டது.

அவர், தனது கடமைகளை நாளை(15) பொறுப்பேற்றுக்கொள்வார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply