ஆர்ப்பாட்டம் குறித்து பொலிஸ் பிரிவினர் விடுத்த விஷேட அறிக்கை!

நாட்டில் பொது மக்களுக்கு பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன அதிகாரபூர்வ அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிவிப்பின் படி, அமைதியான முறையில் மேற்கொண்டு கலைந்து செல்லும் போராட்டங்களை நாம் பாராட்டுகின்றோம். அவ்வாறல்லாமல் செயற்படும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக செயற்படுத்தப்படும்.

பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலான பேராட்டங்களை ஒடுக்குவதற்கு முடியுமான நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைதிப் போராட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டங்களில் தற்போது 2 குழுக்கள் செயற்படுகின்றமை அவதானிக்கப்படுகிறது.

ஒரு குழு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி கலைந்து செல்வதையடுத்து, மற்றைய குழு திட்டமிட்ட வகையில் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கின்றமை தெரியவந்துள்ளது.

நாட்டில் அவசரகால நிலை அமுலில் உள்ள போதிலும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதனை அனுமதிக்க முடியும்.

எனினும், இந்த போராட்டங்களிடையே குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக வன்முறையை தோற்றுவித்து பொது சொத்துக்களுக்கு பங்கம் விளைவித்தல், அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு பிரிவினருக்கு இடையூறு விளைவிப்பதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆர்ப்பாட்டங்களை, படையினர் மற்றும் பொலிஸார் அவதானித்து வருகின்ற நிலையில், முறையற்ற விதத்தில் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க அவர்கள் பின்நிற்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *