இலங்கையில் 300 ரூபாயை தாண்டிய அமெரிக்க டொலரின் விலை

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகித அட்டவணைக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 300 ரூபாவை தாண்டியுள்ளது.

இலங்கையில் உள்ள அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் தினசரி வெளியிடும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு அமைய இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகித அட்டவணைக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 303.49 ரூபாயாக அதிகரித்திருந்தது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 293 ரூபாயாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *