நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்க ரணிலும் ஆலோசனை.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது நாட்டின் நிலை தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கியதேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க,

நாட்டினை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பொறிமுறையொன்றை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும் எனவும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு பலதரப்பு முகவர் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி சாத்தியமானது எனவும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் இது தனது அரசியல் வாழ்வில் இதுவரை கண்டிராத நெருக்கடியாகும். அரசியல் பிரச்சினையைவிட பொருளாதார நெருக்கடியே மேலோங்கியுள்ளது.

மக்களின் சுமையை குறைக்க அரசாங்கம் எப்படியாவது அந்நிய செலாவணியை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் உயர் அதிகாரிகளுடன் தான் தொடர்புகொண்டதாகவும் அவர்களிடமிருந்து நிதி ஒத்துழைப்பு சாத்தியமானது. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி(ADB) ஆகியவற்றிலிருந்து மருந்துகளை வாங்குவது போன்ற அவசர மனிதாபிமான தேவைகளுக்காக குறுகிய கால கடன் வசதிகளைப் பெற முடியும்.என்பதுடன் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நட்பு நாடுகளிடம் இருந்து நிதி உதவியைப் பெற முடியும். அபிவிருத்திக்கான வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக நிவாரண வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *