ஜனாதிபதியுடன்-சுதந்திரக் கட்சியின் 14 எம்.பிக்கள் திடீர் சந்திப்பு.

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்.

நாடாளுமன்ற அமர்வுகள் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களும் ஜனாதிபதியை இன்று மாலை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *