
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ் தொல்புரம் வழக்கம்பரை அம்மன் ஆலய முன்றலில் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் கண்டனப்பேரணி இடம்பெறவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் அறிவித்துள்ளார்.
கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியைக் கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரம்,பெற்றோல்,டீசல், மண்ணெண்னை, சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் தட்டுப்பாட்டு மற்றும் விலை உயர்வினைக் கண்டித்தே இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.