கண்ணீர் புகையால் அவதிப்பட்ட சிறுவனுக்கு இளைஞர்கள் செய்த செயல்

அரசுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் மேலும் வலுப்பெற்று வருகிறது.

குறிப்பாக அமைச்சர்களின் இல்லங்கள் மற்றும் ஆளும் கட்சி நாடளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்கள் மக்களால் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அமைச்சர் ரோஹித அபயகுணவர்தன வீட்டுக்கு அருகில் இடம்பெற்ற போராட்டத்தில் போராட்டகாரர்களை கலைப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை குண்டு வீசியுள்ளனர். இதன் போது குறித்த பகுதியில் உள்ள சிறுவன் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு துணியில் தண்ணீர் நனைத்து, சிறுவனின் கண்ணில் ஒத்தடம் கொடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *