நாட்டில் கடந்த சில தினங்களாக அரசுக்கெதிராக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் இரண்டாவது தடவையாகவும் தற்போது கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தின் முன்னாலும் பல்கலைக்கழக மாணவர்களால் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

