
இலங்கை கடற்படையினரின் பயன்பாட்டிற்காக பொதுமக்களின் காணிகள் பலாத்காரமாக நாளை அளவீடு செய்யபடவுள்ளன. இதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (தீவக கிளை) வாலிப முன்னணியின் தலைவர் கருணாகரன் குணாளன் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கும் செயற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.