கையூட்டு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் வட்டுக்கோட்டையில் கைது

வட்டுக்கோட்டை, ஏப் 5

கையூட்டு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் வட்டுக்கோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருட்டுச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்ற இளவாலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை – பொன்னாலை வீதியில் வைத்து அவர் செவ்வாய்க்கிழமை லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

இளைவாலை பொலிஸ் பிரிவில் வீடுடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரிடமிருந்து கையூட்டு பெற முற்பட்ட போதே ஆனைக்கோட்டையைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *