மறுதலிப்பு செய்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கொழும்பு, ஏப் 5

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த அறிவிப்பை செவ்வாய்க்கிழமை மறுதலிப்பு செய்தனர்.

விமல் வீரவன்ச தரப்புடன் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நாடாளுமன்றில் வைத்து அறிவிக்கப்பட்டது.

அந்த 16 பேரில் உள்ளடக்கப்பட்டதாக கூறப்பட்ட கயேஷான் நவநந்த, இந்த அறிவிப்பை மறுதலிப்பு செய்தார்.

அதேபோன்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அனுரபிரியதர்ஷன யாப்பா பெயர் பட்டியல் ஒன்றை நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை வாசித்தார்.

எனினும் அந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அருந்திக்க பெர்னாண்டோவும், ரொஷான் ரணசிங்கவும் இந்த அறிவிப்பை மறுதலிப்பு செய்துள்ளனர்.

இதன்படி இன்று சுயாதீனமாக செயற்படவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 42 இல் இருந்து 39ஆக குறைவடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *