பிற்போட்டப்பட்ட ஆர்ப்பாட்டத்தை மீண்டும் முன்னெடுக்கிறது தமிழ் முற்போக்கு கூட்டணி

ஊரடங்கு சட்டம் காரணமாக, பிற்போடப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் 7 ஆம் திகதி தலவாக்கலையில் நடத்த உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணி அரச எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஊரங்கு சட்டம் காரணமாக, அது பிற்போடப்பட்டது.

இந்த நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி குறித்த போராட்டத்தை நடத்த உள்ளதாக, எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில், கட்சி, தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும், எதிர்வரும் 7ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான, நாடாளுமன்ற உறப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *