ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதிக்கு அறிவித்த முக்கிய தீர்மானம்

கொழும்பு, ஏப் 5

அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது இந்த விடயத்தை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எனவும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *