அவசரகால சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

அவசர காலச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்காது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *